செவ்வாய், 8 செப்டம்பர், 2009

தமிழ்த்தாய்க்கோர் அகவற்பா செய்க!

சொன்னயம் படைத்தார்ச் சொல்லினிற் பிறந்து
மன்னர்தங் கொடையால் மாண்புற எழுந்தே
இன்றளவும் குறைவிலா இளமைசார்
அன்னையாஞ் செந்தமிழ் அணங்கைவாழ்த் துவமே!


குறிப்பு:-
தமிழ நம்பி அய்யா அவர்கள் அடுத்த பாடம் வழங்கும்வரை, இவ்விடுகையில் தமிழ்த்தாயைப் பற்றி அகவற்பா செய்க என அனைவரையும் அழைக்கிறேன்.

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com