பெயரைப் பார்த்து மருள வேண்டா!
வெண்பாவிற்கு உரிய ஒசை செப்பலோசை.
இது தெரிந்ததே.
இறுதிச்சீர் தவிர்த்த ஏனைய சீர்கள் மூவசைச் சீர்களாக அமைந்த
வெண்பா ஏந்திசைச் செப்பலோசை உடைய வெண்பா ஆகும்.
(வெண்பாவின் மூவசைச்சீர் காய்ச்சீர் என்பது தெரியும் தானே!)
ஈழத்தில் சிங்களவர் எந்தமிழ மக்களையே
போழ்கின்ற புன்செயலின் கேடடக்கி - வாழ்வளிக்க
எண்ணாநம் நாடாள்வோர் ஏதேதோ கூறுகின்றார்
கண்ணாகக் கொள்ளவில்லை காண்.
-சந்தப்பாமணி புலவர் அரங்க.நடராசன்.
இன்னிசை வெண்பாவாகவோ நேரிசை வெண்பாவாகவோ ஏந்திசைச் செப்பலோசையில் ஒரு வெண்பா எழுதலாமே!
ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009
வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009
பொருள்பின்வரு நிலையணி!
இற்றைப் பாடத்தைப் பார்க்கும் முன்னம் சிற்சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ளலாம் எனக்கருதுகிறேன்.
முதலாவதாக:- கவிஞர். தமிழநம்பி அவர்கள்!
முதலில் அவருக்கெனது வாழ்த்துக்களை வெண்பாவில் வழங்கிவிடுகிறேன்:
பல்லாண்டு நீர்வாழப் பண்பார்ந்த பைந்தமிழிற்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவரே! –இல்லாண்டு;
செய்யும் தொழிலாண்டு; சேரும் புகழாண்டு;
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!
“ஏன்டா! இந்த ஒரு வெண்பாவை வைச்சிக்கிட்டு இன்னும் எத்தனை பேரைத்தார் வாழ்த்துவே? –என உமா அவர்கள் உரைப்பது கேட்கிறது. ஆகையால புதுசா, சுடச்சுட ஒரு வெண்பா:-
வளமை, பெருவாழ்வு, வன்னந் துளங்கும்
இளமை, குறைபடா இன்பம் –அளவின்றி
மன்னும் புகழும் மதியும் மிகப்படைத்(து)
இன்றுபோல் என்றும் இரும்!
வெண்பா எழுதலாம் வாங்க! வலையின் பெருமைக்குறிய ஆசிரியராக நம்மோடு கைகோர்த்திருக்கிறார் தமிழநம்பி அவர்கள். அவரது வரவு நம் வலையின் எதிர்காலத்தை நல்வழிநடத்த வழிவகுப்பதாவும், நம்மைப் புதிய, அரிய வகையில் எண்ணிக் கவிவடிக்கும் தூண்டிகோலாகும். அவரை நாம் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதைப்பொருத்தே நம் அடுத்தகட்ட வளர்ச்சி அடங்கியுள்ளது. நமக்கெழும் ஐயங்களை அவ்வப்பொழுது அவர்வழியாக அறிந்துகொண்டு அவரின் கவியறிவை நாமும் அடைவோமாக.
இரண்டாவதாக:-
புதிய அழகுடன் நடைபோடும் நம் வலையில் நாம் மட்டுமே எழுதி வருகிறோம். புதியவர்களை ஈர்க்கும் கமுக்கத்தை (மர்மம்) நாம் அறிந்திருக்க வில்லையோ என்ற ஐயம் எழுகிறது. நம் வலையைப் பலரின் பார்வைக்கும் விரிவுபடுத்துவது இன்றியமையாததாகிறது. யாம்பெற்ற இன்பம் இவ்வையமும் பெறவேண்டும் அல்லவா? திகழ், உமா, வசந்த் –போன்றவர்கள் (பிரபலமான பதிவர்கள்) ஏதேனும் வழிமுறையிருப்பின் உரைக்கவும்.
மூன்றாவதாக:-
திகழ் அவர்களின் வெண்பாவனம் வலையைப் பார்வையிட நேர்ந்தது. நல்லபல வெண்பாக்களைத் தொகுத்து வழங்கும் அரிய பணியைச்செய்து வருகிறார். ஒவ்வொரு வெண்பாவையும் படிக்கும்போது வியப்பே மேலிடுகிறது. நம் வலையின் பெண்பாற்கவிஞர் உமா அவர்களின் எண்ணிறந்த வெண்பாக்கள் அவ்வலையில் இடம்பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய செய்தியாகும். வாழ்க அவர் பணி!
நான்காவதாக:-
வெண்பா எழுதலாம் வாங்க வலையை மென்மேலும் மெருகேற்றுவது நம் ஒவ்வொருவரது கடமையுமாகும். பாடத்தில் உள்ளடக்கத்தில், ஈற்றடிகளில், மாற்றங்கள் நடைபெற வெண்டிக் கருதுவீராயின் தயங்காது உரைப்பீராக. இணையத்தில் வெண்பாப் பாடம் நடத்தும் வெகுசில வலைகளில் நம் வலையும் ஒன்று அதைத்தொய்வின்றிக் கொண்டுசெல்ல நாம் நம்மைப் புதுப்பித்துக்கொள்வதுடம் மற்றவரையும் கவர்ந்திழுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் அறிவீராயின் அவனடிமை போன்ற பட்டறிவு படைத்தோர் உரைக்கத் தவறவேண்டாம். நன்றிகள். இனி பாடத்திற்குச் செல்வோம்.
2.பொருள்பின்வரு நிலையணி:-
ஒரு பாவுள் ஒரே பொருளைத் தாங்கிப் பல சொற்கள் கையாளப் படின் அப்பா, பொருள் பின்வரு நிலையணியாம்.
காட்டு:-
அவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை –முகிழ்ந்திதழ்
விட்டன கொன்றை விரிந்த கருவினை
கொண்டன காந்தல் குலை!
மேலுள்ள பா, “அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், முகிழ்தல், விரிதல்” ஆகிய வெவ்வேறு சொற்களைக் கொண்டிருப்பினும், “மலர்தல்” என்கிற ஒரே பொருளைத் தாங்கியமையான் பொருள் பின்வரு நிலையணியாகும்.
இக்கிழமைக்கு வெண்பாவின் முதற்சொல் வழங்கப்படும்.
இக்கிழமைக்கான வெண்பாவின் முதற்சொல்:- மன்றல்! (மணம்)
முதலாவதாக:- கவிஞர். தமிழநம்பி அவர்கள்!
முதலில் அவருக்கெனது வாழ்த்துக்களை வெண்பாவில் வழங்கிவிடுகிறேன்:
பல்லாண்டு நீர்வாழப் பண்பார்ந்த பைந்தமிழிற்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவரே! –இல்லாண்டு;
செய்யும் தொழிலாண்டு; சேரும் புகழாண்டு;
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!
“ஏன்டா! இந்த ஒரு வெண்பாவை வைச்சிக்கிட்டு இன்னும் எத்தனை பேரைத்தார் வாழ்த்துவே? –என உமா அவர்கள் உரைப்பது கேட்கிறது. ஆகையால புதுசா, சுடச்சுட ஒரு வெண்பா:-
வளமை, பெருவாழ்வு, வன்னந் துளங்கும்
இளமை, குறைபடா இன்பம் –அளவின்றி
மன்னும் புகழும் மதியும் மிகப்படைத்(து)
இன்றுபோல் என்றும் இரும்!
வெண்பா எழுதலாம் வாங்க! வலையின் பெருமைக்குறிய ஆசிரியராக நம்மோடு கைகோர்த்திருக்கிறார் தமிழநம்பி அவர்கள். அவரது வரவு நம் வலையின் எதிர்காலத்தை நல்வழிநடத்த வழிவகுப்பதாவும், நம்மைப் புதிய, அரிய வகையில் எண்ணிக் கவிவடிக்கும் தூண்டிகோலாகும். அவரை நாம் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதைப்பொருத்தே நம் அடுத்தகட்ட வளர்ச்சி அடங்கியுள்ளது. நமக்கெழும் ஐயங்களை அவ்வப்பொழுது அவர்வழியாக அறிந்துகொண்டு அவரின் கவியறிவை நாமும் அடைவோமாக.
இரண்டாவதாக:-
புதிய அழகுடன் நடைபோடும் நம் வலையில் நாம் மட்டுமே எழுதி வருகிறோம். புதியவர்களை ஈர்க்கும் கமுக்கத்தை (மர்மம்) நாம் அறிந்திருக்க வில்லையோ என்ற ஐயம் எழுகிறது. நம் வலையைப் பலரின் பார்வைக்கும் விரிவுபடுத்துவது இன்றியமையாததாகிறது. யாம்பெற்ற இன்பம் இவ்வையமும் பெறவேண்டும் அல்லவா? திகழ், உமா, வசந்த் –போன்றவர்கள் (பிரபலமான பதிவர்கள்) ஏதேனும் வழிமுறையிருப்பின் உரைக்கவும்.
மூன்றாவதாக:-
திகழ் அவர்களின் வெண்பாவனம் வலையைப் பார்வையிட நேர்ந்தது. நல்லபல வெண்பாக்களைத் தொகுத்து வழங்கும் அரிய பணியைச்செய்து வருகிறார். ஒவ்வொரு வெண்பாவையும் படிக்கும்போது வியப்பே மேலிடுகிறது. நம் வலையின் பெண்பாற்கவிஞர் உமா அவர்களின் எண்ணிறந்த வெண்பாக்கள் அவ்வலையில் இடம்பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய செய்தியாகும். வாழ்க அவர் பணி!
நான்காவதாக:-
வெண்பா எழுதலாம் வாங்க வலையை மென்மேலும் மெருகேற்றுவது நம் ஒவ்வொருவரது கடமையுமாகும். பாடத்தில் உள்ளடக்கத்தில், ஈற்றடிகளில், மாற்றங்கள் நடைபெற வெண்டிக் கருதுவீராயின் தயங்காது உரைப்பீராக. இணையத்தில் வெண்பாப் பாடம் நடத்தும் வெகுசில வலைகளில் நம் வலையும் ஒன்று அதைத்தொய்வின்றிக் கொண்டுசெல்ல நாம் நம்மைப் புதுப்பித்துக்கொள்வதுடம் மற்றவரையும் கவர்ந்திழுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் அறிவீராயின் அவனடிமை போன்ற பட்டறிவு படைத்தோர் உரைக்கத் தவறவேண்டாம். நன்றிகள். இனி பாடத்திற்குச் செல்வோம்.
2.பொருள்பின்வரு நிலையணி:-
ஒரு பாவுள் ஒரே பொருளைத் தாங்கிப் பல சொற்கள் கையாளப் படின் அப்பா, பொருள் பின்வரு நிலையணியாம்.
காட்டு:-
அவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை –முகிழ்ந்திதழ்
விட்டன கொன்றை விரிந்த கருவினை
கொண்டன காந்தல் குலை!
மேலுள்ள பா, “அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், முகிழ்தல், விரிதல்” ஆகிய வெவ்வேறு சொற்களைக் கொண்டிருப்பினும், “மலர்தல்” என்கிற ஒரே பொருளைத் தாங்கியமையான் பொருள் பின்வரு நிலையணியாகும்.
இக்கிழமைக்கு வெண்பாவின் முதற்சொல் வழங்கப்படும்.
இக்கிழமைக்கான வெண்பாவின் முதற்சொல்:- மன்றல்! (மணம்)
அகரம் அமுதா
புதன், 5 ஆகஸ்ட், 2009
இன்னிசை வெண்பா!
இந்த முறை ஓர் எளிதான வெண்பா எழுதலாம்.
இது நான்கடிப் பாடல்.
இரண்டாமடியில் தனிச்சொல் வராது.
நான்கடிகளும் ஓர் எதுகை ( இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது) பெற்றும் வரலாம்; முதல் இரண்டடிகள் ஓர் எதுகையுடனும், பின் இரண்டடிகள் வேறு எதுகையுடனும் வரலாம்.
வெண்டளை பெற்றிருக்க வேண்டும்.
( நினைவுக்கு : காய் முன் நேர், மா முன் நிரை, விளம் மின் நேர்)
இறுதிச் சீர், நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றால் முடிந்திருக்க வேண்டும்.
இவ்வாறு அமைந்த பாடலை இன்னிசை வெண்பா என்பர்.
எல்லாம் இழந்துவிட் டேதிலியாய் நிற்பவர்க்கு
நல்லோர் கொடையாக நல்கும் பொருள்களை
வல்லாண்மை யாக மறுத்துத் திருப்புகின்ற
பொல்லானே மண்மேடாய்ப் போ.
இந்தப்பாடல் புதுச்சேரிப் புலவர் அரங்க.நடராசனார் எழுதியது.
இப்பாடலில் நான்கடிகளும் ஓர் எதுகை ( 'ல்' ) அமைந்துள்ளது.
இப்போது, நீங்களும் உங்களுக்கு விருப்பமான கருத்தமைந்த ஓர் இன்னிசை வெண்பா எழுதலாமே!
தமிழநம்பி
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009
சொல்பின்வரு நிலையணி!
1.சொல்பின்வரு நிலையணி:-
ஒருமுறை வந்தசொல் பலமுறை வந்து வேறுவேறான பொருளைத் தந்து நிற்குமாயின் அப்பா, சொல்பின்வரு நிலையணி வகையாகும்.
காட்டு:-
பூக்காடு நேர்தமிழைப் போற்றிப்பாத் தென்ற(ல்)செய்
பாக்காடு தான்காடு மற்றெல்லாம் –சாக்காடு
சீக்காடு முட்காடு தீக்காடு முக்காடு
நோக்காடு மற்றறைவேக் காடு! –அகரம் அமுதா-
மேலுள்ள எனது பாடலில் உள்ள காடு எனுஞ்சொல் முதல் இரண்டடிகளின் முதற்சீரில் வருங்கால் ஒரே பொருளைத் தந்து நிற்பினும், தனிச்சொற்குப் பின் வருங் “காடு” எனுஞ்சொல் (சாக்காடு –இறப்பு, சீக்காடு –நோயுடைய ஆடு, முக்காடு –தலையில் போர்த்துந் துணி, நோக்காடு –நோய், அறைவேக்காடு –வேகாநிலை) ஓரீரசைகளைச் சேர்த்துக்கொண்டமையால் வெவ்வேறு பொருளைத் தந்து நிற்கிறது. ஆதலால் அப்பா, சொல்பின்வரு நிலையாணியாம்.
இக்கிழமைக்கு ஈற்றடி கிடையாது. மேல் வழங்கப்பட்டுள்ள சொல்பின்வரு நிலையணியைப் பயன்படுத்தி வெண்பா வடிக்க வேண்டுகிறேன்.
இக்கிழமைக்கான “சொற்பின்வரு நிலையணி”க்கான சொல்:- (உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு சொல்லைத் தேர்ந்து எழுதவும்)
ஒருமுறை வந்தசொல் பலமுறை வந்து வேறுவேறான பொருளைத் தந்து நிற்குமாயின் அப்பா, சொல்பின்வரு நிலையணி வகையாகும்.
காட்டு:-
பூக்காடு நேர்தமிழைப் போற்றிப்பாத் தென்ற(ல்)செய்
பாக்காடு தான்காடு மற்றெல்லாம் –சாக்காடு
சீக்காடு முட்காடு தீக்காடு முக்காடு
நோக்காடு மற்றறைவேக் காடு! –அகரம் அமுதா-
மேலுள்ள எனது பாடலில் உள்ள காடு எனுஞ்சொல் முதல் இரண்டடிகளின் முதற்சீரில் வருங்கால் ஒரே பொருளைத் தந்து நிற்பினும், தனிச்சொற்குப் பின் வருங் “காடு” எனுஞ்சொல் (சாக்காடு –இறப்பு, சீக்காடு –நோயுடைய ஆடு, முக்காடு –தலையில் போர்த்துந் துணி, நோக்காடு –நோய், அறைவேக்காடு –வேகாநிலை) ஓரீரசைகளைச் சேர்த்துக்கொண்டமையால் வெவ்வேறு பொருளைத் தந்து நிற்கிறது. ஆதலால் அப்பா, சொல்பின்வரு நிலையாணியாம்.
இக்கிழமைக்கு ஈற்றடி கிடையாது. மேல் வழங்கப்பட்டுள்ள சொல்பின்வரு நிலையணியைப் பயன்படுத்தி வெண்பா வடிக்க வேண்டுகிறேன்.
இக்கிழமைக்கான “சொற்பின்வரு நிலையணி”க்கான சொல்:- (உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு சொல்லைத் தேர்ந்து எழுதவும்)
அகரம் அமுதா
திங்கள், 3 ஆகஸ்ட், 2009
பின்வரு நிலையணி!
.......... .... .... .. .... ... ... ... ... ... ... ... .. மலேசிய பேச்சாளர் பாண்டித்துரை --- அகரம் அமுதா .
அணிவகைகளைப் பற்றி நிறையவே நான் முந்தைய பாடங்களிற் பார்த்திருக்கிறோம் ஆயினும், அவ்வவ்வணிகளுக் கேற்றாற்போல் பாப்புனைந்தோமா? என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நமது வெண்பா எழுதலாம் வலையின் நோக்கம், புதிதாக எழுதுபவர்களை ஊக்கப் படுத்துவதும், முன்பிருந்தே எழுதுபவர்களை மென்மேலும் மெருகேற்றுவதுமேயாகும்.
அந்த வகையில் நம் “வெண்பா எழுதலாம் வாங்க” –வலையின் உயிர்த்துடிப்புக்களான, உமா, வசந்த், அவனடிமையார், திகழ், இராஜகுரு, சவுக்கடியார் யாவரும் எக்கருத்தையும் எளிதிற் சொல்லும் ஆற்றலை இயல்பாகக் கைவரப்பெற்று விளங்குவது கண்டு வியக்கிறேன். இத்தகைய ஆற்றலை நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது இன்றியமையாக் கடமையாகிறது. ஆக அணிகள் பற்பலவெனினும் இலகுவாக எளிதாக உள்ள அணிவகைகளுக்கு உட்பட்டு முதற்கட்ட முயற்சிகளைச் செய்யத் தொடங்குதல் சிறப்பெனக் கருதுகிறேன்.
அந்த வகையில் இப்பாடத்திற் காணவிருக்கும் அணி –பின்வரு நிலையணி!
இப்பின் வருநிலையணி மூன்று வகைப்படும். 1.சொல்பின்வரு நிலையணி 2.பொருள்பின்வரு நிலையணி 3.சொற்பொருட்பின்வரு நிலையணி 4.உவமைப்பொருள் பின்வரு நிலையணி.
1.சொற்பின்வரு நிலையணி –ஒருசொல் பலபொருளைத் தருதல்.
2.பொருள்பின்வரு நிலையணி –பலசொல் ஒருபொருளைத் தருதல்.
3.சொற்பொருள் பின்வரு நிலையணி –பலமுறை வந்தும் ஒருசொல் ஒரேபொருளைத் தருதல்.
4.உவமைப்பின்வரு நிலையணி –ஒருபொருளைத் தரும் பலசொல் உவமையாகி நிற்றல்.
இப்பின்வரு நிலையணிகளுக்கான காட்டுகளைப் பின்வரும் பாடங்களில் காண்போம்.
இக்கிழமைக்கு ஈற்றடி வழங்கப்போவதில்லை. மாறாக, தனிச்சொல் தரவிருக்கிறேன்.
இக்கிழமைக்கான தனிச்சொல்:- கோமணம்!
அந்த வகையில் நம் “வெண்பா எழுதலாம் வாங்க” –வலையின் உயிர்த்துடிப்புக்களான, உமா, வசந்த், அவனடிமையார், திகழ், இராஜகுரு, சவுக்கடியார் யாவரும் எக்கருத்தையும் எளிதிற் சொல்லும் ஆற்றலை இயல்பாகக் கைவரப்பெற்று விளங்குவது கண்டு வியக்கிறேன். இத்தகைய ஆற்றலை நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது இன்றியமையாக் கடமையாகிறது. ஆக அணிகள் பற்பலவெனினும் இலகுவாக எளிதாக உள்ள அணிவகைகளுக்கு உட்பட்டு முதற்கட்ட முயற்சிகளைச் செய்யத் தொடங்குதல் சிறப்பெனக் கருதுகிறேன்.
அந்த வகையில் இப்பாடத்திற் காணவிருக்கும் அணி –பின்வரு நிலையணி!
இப்பின் வருநிலையணி மூன்று வகைப்படும். 1.சொல்பின்வரு நிலையணி 2.பொருள்பின்வரு நிலையணி 3.சொற்பொருட்பின்வரு நிலையணி 4.உவமைப்பொருள் பின்வரு நிலையணி.
1.சொற்பின்வரு நிலையணி –ஒருசொல் பலபொருளைத் தருதல்.
2.பொருள்பின்வரு நிலையணி –பலசொல் ஒருபொருளைத் தருதல்.
3.சொற்பொருள் பின்வரு நிலையணி –பலமுறை வந்தும் ஒருசொல் ஒரேபொருளைத் தருதல்.
4.உவமைப்பின்வரு நிலையணி –ஒருபொருளைத் தரும் பலசொல் உவமையாகி நிற்றல்.
இப்பின்வரு நிலையணிகளுக்கான காட்டுகளைப் பின்வரும் பாடங்களில் காண்போம்.
இக்கிழமைக்கு ஈற்றடி வழங்கப்போவதில்லை. மாறாக, தனிச்சொல் தரவிருக்கிறேன்.
இக்கிழமைக்கான தனிச்சொல்:- கோமணம்!
அகரம் அமுதா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)