காட்டுப் பாடல்கள்!
ஒழுக்கம் என்பதை உரியின் மேலதாய்
வழுக்கல் இன்றியே காத்து வாழ்பவர்
தழைக்கும் ஓர்புகழ் தாங்கு வாரவர்
இழுக்கம் ஏற்படின் ஈவர் தம்முயிர்! --- புலவர் அரங்க. நடராசன்
நெஞ்சில் மாசினை நிறைத்து வைத்திடல்
நஞ்சைப் பாலினில் நயந்து சேர்ப்பதாம்
நெஞ்சில் நல்லதே நிறைந்து நிற்பதால்
எஞ்சும் இன்பினுக் கெல்லை இல்லையே! --- அகரம் அமுதா
உன்னில் மிக்கவர் ஊரில் ஆயிரம்
உன்னை மேலென உள்ளல் தப்படா!
எண்ணிப் பார்த்திடின் யாரும் யார்க்குமே
சின்ன வர்இலர் சிந்தித் துய்கவே! --- அகரம் அமுதா



