1. அடிதோறும் ஏழு சீர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
2. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
3. 1 ஆம் 5 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும். அல்லது 1 ஆம் 7 ஆம் சீர்களில் மோனை அமையலாம்.
4. தேமா, புளிமா ஆகிய மாச்சீர்கள் இரண்டும், தேமாங்காய், புளிமாங்காய் ஆகிய மாங்காய்ச்சீர்கள் இரண்டும் மட்டுமே இப்பாவில் பெற்றுவரும். இதில் தேமாங்காய் அடியின் முதற்சீரில் மட்டுமே வரும். இடையில் எங்கும் வராது.
5. சீர்கள் முறையே—
தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமா
(அல்லது)
தேமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா
6. இவ்வகைப்பா முழுக்க முழுக்க வெண்டளையான் இயன்றது என்பதறிக.
7. 1ஆம் 3ஆம் 5ஆம் சீர்கள் ஈரசைச் சீர்களாகவும், மூவசைச்சீர்களாகவும் வரலாம். 2ஆம் 4ஆம் 6ஆம் 7ஆம் சீர்கள் கட்டாயம் இயற்சீர்களாகவே (தேமா, புளிமா) வர வேண்டும்.
8. ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிதல் சிறப்பு. இல்லையாயினும் குறையில்லை.
காட்டுப் பாடல்கள்!
புன்சொற்கள் தந்த பகுவாய் அரக்கன்
உரைபொய் எனாது புலர்வாள்
வன்சொற் கடந்து மடமங்கை ஏவ
நிலைதேர வந்த மருளே
தன்சொற் கடந்து தளர்கின்ற நெஞ்சம்
உடையேன் மருங்கு தனியே
என்சொற் கடந்து மனமும் தளர்ந்த
இளவீரன் வந்த இயல்பே! --- கம்பரா…
பச்சை - மோனையைக் குறிக்கிறது.
மஞ்சல் - காய்ச்சீர்களைக் குறிக்கிறது.



