திங்கள், 26 ஜூலை, 2010

வஞ்சி மண்டிலம்! 1

ஒவ்வோரடியிலும் மூன்று சீர்கள் இருக்க வேண்டும்.

இவ்வாறு நான்கடிகள் அமைந்தது ஒரு பாடல். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தால் முடிதல் வேண்டும் என்பது கட்டாயமில்லை. அமைந்தால் நன்று.

இவ்வாறு அமைந்துள்ள பாடலை வஞ்சி மண்டிலம் என்று வழங்குவர். ஒவ்வோரடியிலும் மூன்று சீர்கள் இருக்கும் என்று பொதுப்படக் கூறினாலும் சீரமைப்பால் வஞ்சிமண்டிலம் பலவகையாகப் பிரிக்கலாம். அவற்றுள் ஒருவகை-


தேமா + தேமா + கூவிளம் என்ற வாய்பாட்டால் இயன்றது.

அன்பு கொண்டு வாழ்வதால்
துன்பம் நீங்கி உய்யலாம்
இன்பம் உண்டு மண்ணினில்
என்றும் இஃதோர் உண்மையே!