வியாழன், 26 ஆகஸ்ட், 2010

வஞ்சி மண்டிலம்! 5

விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

பிறந்தவர் புகழுற வேண்டின்
இறந்தபின் நிலைபெற வேண்டின்
பிறவுயிர் தம்முயிர் என்றே
அறிந்தவை வாழ்வுறச் செய்வீர்! -புலவர் அரங்க.நடராசன்

புதன், 18 ஆகஸ்ட், 2010

வஞ்சி மண்டிலம்! 4

மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

பசித்தால் உண்பது நன்றாகும்
பசியா துண்பது நோயாகும்
புசிக்க வாழ்வது பெருந்தீங்கு
புசித்தல் வாழ்வதற் கெனல்நன்றே! -புலவர் அரங்க. நடராசன்

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

வஞ்சி மண்டிலம்! 3

விளம் + விளம் + காய் என்ற தளையமைப்பைக் கொண்ட வஞ்சி மண்டிலம்.

நல்லவர் நட்பினை நாடுகவே
அல்லவர் நட்பினை அகலுகவே
வல்லவர் ஆகவே வாழுகவே
இல்லையோர் நன்மையும் இதனினுமே! -புலவர் அரங்க. நடராசன்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

வஞ்சி மண்டிலம்! 2

ஓரடியில் மூன்று சீர்கள் வரவேண்டும் என்பதை முன்பே அறிவோம்.

கீழ்காணும் பாவிற்கான தளைகள்

தேமா + கூவிளம் + கூவிளம்

உண்மை என்றொரு பண்பினை
ஒண்மை யாகநாம் கொண்டிடின்
வெண்மை அகு(ம்)நம் உள்ளமே
மண்ணில் வாழலாம் மன்னியே! -புலவர் அரங்க. நடராசன்