நான்கடிகளைக் கொண்டது அளவியல் வெண்பாவாகும். மூவடி முக்கால் அளவியல் வெண்பா என்கிறது தொல்காப்பியம்.
சிந்தியல் வெண்பா முதற்கொண்டு பின்வரும் அனைத்துவெண்பா வகைகளும் நேரிசை இன்னிசை என இருவகைப்படும்.
நேரிசை அளவியல் வெண்பா:-
நாலடி வெண்பாவில் முதல் இரண்டடிகளின் எதுகை பெற்ற தனிச்சீரை இரண்டாமடியின் ஈற்றில் (அதாவது 8ம் சீரில்) பெற்று வருவது நேரிசை வெண்பாவாகும். (ஆக நேரிசைக்கு இவ்வோர் விதியைத் தவிர வேறு விதிகள் கிடையாது.ஆதலால் இவ்விதியை மீறும் ஏனைய வடிவங்கள் இன்னிசையாக் கொள்ளப்படும்)
காட்டு:-
கோடிக் கவிஞருள் கோமகளே! நீயென்னைத்
தேடிக் களைப்புறவுஞ் செய்வேனோ? -நாடியெனைக்
கோத்தள்ளிக் கொஞ்சக் குறிப்பொன் றுரைப்பதெனில்
பாத்தென்றல் மாணாக்கன் பார்! -அகரம்.அமுதா
இவ்வெண்பாவைக் கவனித்தீரா? கோடி தேடி என்னும் அடியெதுகைக்குத் தனியெதுகை நாடி என வந்தமையால் இது நேரிசை வெண்பா.
(1,5,8ம் சீர்களில் எதுகையெடுத்து வந்தால் மட்டும் பொதாது. 9மற்றும் 13ம் சீர்களிலும் எதுகையமைய வேண்டும். 1,5,8 ம் சீர்களில் வந்த எதுகையே 9மற்றும்13ம் சீர்களில் வரவேண்டும் என்பதில்லை. வேறெதுகையும் பெற்றும் வரலாம். எதுகை பெற்று வரவேண்டும் என்பதே விதி.)
(1,5,8ல் எதுகை பெற்று 9மற்றும் 13ல் எதுகைபெற வில்லையெனில் அது இன்னிசைவெண்பாவெனக் கொள்ளப்படும்.)
இன்னிசை அளவியல் வெண்பா!
இன்னிசை வெண்பாக்கள் பலவகைப்படும்.
1-நாலடியிலும் ஒரேயெதுகையைப் பெற்று வருதல் (தனிச்சொல் மட்டும் இரா)
2-பல எதுகைகளைப் பெற்று வருதல்
3-அடிதோறும் தனிச்சீர் பெற்று வருதல்
4-இரண்டாமடியிலும் மூன்றாமடியிலும் தனிச்சீர் பெற்று வருதல்
5-மூன்றாம் அடியில் தனிச்சீர் பெற்று வருதல்
போன்றவை இன்னிசை வெண்பாக்களாகும்.
காட்டு:-
இன்னாமை வேண்டின் இரவெழுக -இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக -தன்னொடு
செல்லவது வேண்டின் அறஞ்செய்க -வெல்வது
வேண்டின் வெகுளி விடல். -நான்மணிக்கடிகை.
இது அடிதோறும் தனிச்சீர் பெற்றமையால் இன்னிசையானது.
கள்வமென் பார்க்குத் துயிலில்லை காதலிமாட்
டுள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்
செய்வமென் பார்க்குந் துயிலில்லை அப்பொருள்
காப்பவர்க்கும் இல்லை துயில்! -நான்மணிக்கடிகை.
பல எதுகை பெற்று வந்தமையால் இன்னிசையானது.
மேலும் பல இன்னிசை அளவியல் வெண்பாக்களை அறிய இவ்விடம் கிளிக் செய்க!
குறிப்பு:-
1,5,8ம் சீர்களில் ஓரெதுகையும் 9மற்றும்13ல் ஓரெதுகையும் பெற்றோ அல்லது 1,5,8,9மற்றும்13ம் சீர்கள் ஒரே எதுகையான் அமைந்தோ வருவது நேரிசையாகும். இவ்விதிக்கு மாறுபட்ட யாவும் இன்னிசை வெண்பா வகை என்றே அறுதியிட்டுச் சொல்லிவிடலாம். ஆகையால் நேரிசை வெண்பாவிற்கான விதியை நன்கு தெரிந்து நினைவில் கொள்க.
ஒன்றைந்தோ டெட்டாம்சீர் உற்ற எதுகையெடுத்
தொன்பதாம் சீரும் பதின்மூன்றும் -நன்கெதுகை
கொண்டுவரின் நேரிசையாம்; கொள்ளாக்கால் மற்றவை
இன்னிசை என்றே இயம்பு! -அகரம்.அமுதா
நேரிசையென் பாரிதையே நேரிழையே! ஈற்றினில்
ஓரசையோ நாள்பிறப்போ ஓடிவரும் -ஓரடியில்
மோனை வரவேண்டும் மூன்றிரண்டில் நல்லெதுகை
தானமையச் சாற்றுதல்வேண் டும்! -பாரதிதாசன்
ஒன்றைந்தெட் டாகியசீர் ஒத்த எதுகையாய்
நின்றபதி மூன்றொன்பா னேரொத்து -நன்றியலு
நீடுசீர் மூவைந்தா நேரிசைவெண் பாவென்பர்
நாடுசீர் நாப்புலவர் நன்கு! -வீரசோழியம்
சிந்தியல் வெண்பா முதற்கொண்டு பின்வரும் அனைத்துவெண்பா வகைகளும் நேரிசை இன்னிசை என இருவகைப்படும்.
நேரிசை அளவியல் வெண்பா:-
நாலடி வெண்பாவில் முதல் இரண்டடிகளின் எதுகை பெற்ற தனிச்சீரை இரண்டாமடியின் ஈற்றில் (அதாவது 8ம் சீரில்) பெற்று வருவது நேரிசை வெண்பாவாகும். (ஆக நேரிசைக்கு இவ்வோர் விதியைத் தவிர வேறு விதிகள் கிடையாது.ஆதலால் இவ்விதியை மீறும் ஏனைய வடிவங்கள் இன்னிசையாக் கொள்ளப்படும்)
காட்டு:-
கோடிக் கவிஞருள் கோமகளே! நீயென்னைத்
தேடிக் களைப்புறவுஞ் செய்வேனோ? -நாடியெனைக்
கோத்தள்ளிக் கொஞ்சக் குறிப்பொன் றுரைப்பதெனில்
பாத்தென்றல் மாணாக்கன் பார்! -அகரம்.அமுதா
இவ்வெண்பாவைக் கவனித்தீரா? கோடி தேடி என்னும் அடியெதுகைக்குத் தனியெதுகை நாடி என வந்தமையால் இது நேரிசை வெண்பா.
(1,5,8ம் சீர்களில் எதுகையெடுத்து வந்தால் மட்டும் பொதாது. 9மற்றும் 13ம் சீர்களிலும் எதுகையமைய வேண்டும். 1,5,8 ம் சீர்களில் வந்த எதுகையே 9மற்றும்13ம் சீர்களில் வரவேண்டும் என்பதில்லை. வேறெதுகையும் பெற்றும் வரலாம். எதுகை பெற்று வரவேண்டும் என்பதே விதி.)
(1,5,8ல் எதுகை பெற்று 9மற்றும் 13ல் எதுகைபெற வில்லையெனில் அது இன்னிசைவெண்பாவெனக் கொள்ளப்படும்.)
இன்னிசை அளவியல் வெண்பா!
இன்னிசை வெண்பாக்கள் பலவகைப்படும்.
1-நாலடியிலும் ஒரேயெதுகையைப் பெற்று வருதல் (தனிச்சொல் மட்டும் இரா)
2-பல எதுகைகளைப் பெற்று வருதல்
3-அடிதோறும் தனிச்சீர் பெற்று வருதல்
4-இரண்டாமடியிலும் மூன்றாமடியிலும் தனிச்சீர் பெற்று வருதல்
5-மூன்றாம் அடியில் தனிச்சீர் பெற்று வருதல்
போன்றவை இன்னிசை வெண்பாக்களாகும்.
காட்டு:-
இன்னாமை வேண்டின் இரவெழுக -இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக -தன்னொடு
செல்லவது வேண்டின் அறஞ்செய்க -வெல்வது
வேண்டின் வெகுளி விடல். -நான்மணிக்கடிகை.
இது அடிதோறும் தனிச்சீர் பெற்றமையால் இன்னிசையானது.
கள்வமென் பார்க்குத் துயிலில்லை காதலிமாட்
டுள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்
செய்வமென் பார்க்குந் துயிலில்லை அப்பொருள்
காப்பவர்க்கும் இல்லை துயில்! -நான்மணிக்கடிகை.
பல எதுகை பெற்று வந்தமையால் இன்னிசையானது.
மேலும் பல இன்னிசை அளவியல் வெண்பாக்களை அறிய இவ்விடம் கிளிக் செய்க!
குறிப்பு:-
1,5,8ம் சீர்களில் ஓரெதுகையும் 9மற்றும்13ல் ஓரெதுகையும் பெற்றோ அல்லது 1,5,8,9மற்றும்13ம் சீர்கள் ஒரே எதுகையான் அமைந்தோ வருவது நேரிசையாகும். இவ்விதிக்கு மாறுபட்ட யாவும் இன்னிசை வெண்பா வகை என்றே அறுதியிட்டுச் சொல்லிவிடலாம். ஆகையால் நேரிசை வெண்பாவிற்கான விதியை நன்கு தெரிந்து நினைவில் கொள்க.
ஒன்றைந்தோ டெட்டாம்சீர் உற்ற எதுகையெடுத்
தொன்பதாம் சீரும் பதின்மூன்றும் -நன்கெதுகை
கொண்டுவரின் நேரிசையாம்; கொள்ளாக்கால் மற்றவை
இன்னிசை என்றே இயம்பு! -அகரம்.அமுதா
நேரிசையென் பாரிதையே நேரிழையே! ஈற்றினில்
ஓரசையோ நாள்பிறப்போ ஓடிவரும் -ஓரடியில்
மோனை வரவேண்டும் மூன்றிரண்டில் நல்லெதுகை
தானமையச் சாற்றுதல்வேண் டும்! -பாரதிதாசன்
ஒன்றைந்தெட் டாகியசீர் ஒத்த எதுகையாய்
நின்றபதி மூன்றொன்பா னேரொத்து -நன்றியலு
நீடுசீர் மூவைந்தா நேரிசைவெண் பாவென்பர்
நாடுசீர் நாப்புலவர் நன்கு! -வீரசோழியம்
அகரம்.அமுதா