அடிமறிமண்டில ஆசிரியப்பாவின் இலக்கணம் :
ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் யாவும் பொருந்தி இருக்க வேண்டும்.
அடிதோறும் நான்கு சீர்கள் அமைந்திருக்க வேண்டும்.
முதல், நடு, இறுதி என்ற எந்த அடியையும் எங்கு அமைத்துப் பாடினாலும் ஓசையும் பொருளும் சிதையாமல் இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டுப் பாடல்கள் :
அழுக்கா றுடையவன் அழிவதோ உறுதியே
ஒழுக்க முடையான் உயர்வ துறுதியே
வழுக்கலில் ஊன்றுகோல் சான்றோர் வாய்ச்சொலே
விழிப்புடன் வாழ்பவன் வேண்டிய தடைவனே. - புலவர் அரங்க. நடராசனார்.
சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளிர் ஆரணங் கினரே
வாரலை யெனினே யானஞ் சுவலே
சாரல் நாட நீவர லாறே. - யாப். காரிகை எடுத்துக்காட்டுப் பாடல்.
அன்பருள் உணர்வே ஆளுக உலகே
இன்பம் பிறர்துயர் இலாதே நீக்கலே
என்றும் நாடுக இனியநற் புகழே
நின்று பெயர்சொலும் நேர்மை உண்மையே. - த.ந.
இனி, அடிமறி மண்டில ஆசிரியப்பா எழுதலாமே.
வெள்ளி, 25 செப்டம்பர், 2009
புதன், 16 செப்டம்பர், 2009
இணைக்குறள் ஆசிரியப்பா
இணைக்குறள் ஆசிரியப்பாவில் ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்கள் அமைந்திருக்கும்.
அவற்றுடன், முதல் அடியும் ஈற்றடியும் நாற்சீரடிகளாய் இருக்க, இடையில் உள்ள அடிகளில் பல இருசீரடிகளாகவும் முச்சீரடிகளாகவும் வரும்.
(இயல்பாக, நாற்சீரடிகளும் இடம்பெறும்)
நெற்களம் என்றா நினைத்துப் பார்க்கிறீர்
நெற்களம் அன்றிது நெடுஞ்சாலை.
எங்கள் ஊரார் இங்கேதான்
வைக்கோல் உலர்த்துவார்;
அறுத்த கதிர்களைப்
பரப்பிப் போடுவார்;
ஓடும் ஊர்திகள் உதிர்த்துப் போடும்;
ஓடிப்போய் மீண்டும் உதறிப் போடுவார்.
துள்ளும் துகள்சில
விழுவதும் எழுவதும் என்றும்
வாடிக்கை என்பதால் வருந்துவ திலரே! - புதுவை அரங்க. நடராசனார்.
புதுப்பா போல் உள்ளதா?
அமைதி சான்ற அறிஞரும் அருமையான பாவலருமாகிய பேராசிரியர்
ம.இலெ.தங்கப்பா அவர்கள் இவ்வாறு கூறுகிறார்:
“தமிழ் யாப்பு வடிவங்களுக்குள் நின்று விடுதலையாகக் கருத்துரைக்க முடியவில்லை என்று கூறுபவர்கட்கு, அப்படி விடுதலையோடு கருத்து உணர்த்த இணைக்குறள் ஆசிரியப்பா இடம் கொடுக்க வல்லது.”
இன்னொரு இணைக்குறள் ஆசிரியப்பா:
இவர்தான் இவ்வலை உரிமையர் சிறப்புறப்
பாடல் பயிற்றுநர்
ஈடாரு மில்லா இனியர்
பண்புறை பாவலர்
தண்ணிய உரையினர்
சிங்கப் பூரில் தங்கி உழைக்குநர்
எங்குசென் றாலும் இன்றமிழ் ஏத்துநர்
ஆமாம்! இவரே அகரம் அமுதா!
தாமறி தமிழைத் தருநர் பிறர்க்கே! – த.ந.
இப்போது எளிதாக இணைக்குறள் ஆசிரியப்பா எழுதலாமே!
அவற்றுடன், முதல் அடியும் ஈற்றடியும் நாற்சீரடிகளாய் இருக்க, இடையில் உள்ள அடிகளில் பல இருசீரடிகளாகவும் முச்சீரடிகளாகவும் வரும்.
(இயல்பாக, நாற்சீரடிகளும் இடம்பெறும்)
நெற்களம் என்றா நினைத்துப் பார்க்கிறீர்
நெற்களம் அன்றிது நெடுஞ்சாலை.
எங்கள் ஊரார் இங்கேதான்
வைக்கோல் உலர்த்துவார்;
அறுத்த கதிர்களைப்
பரப்பிப் போடுவார்;
ஓடும் ஊர்திகள் உதிர்த்துப் போடும்;
ஓடிப்போய் மீண்டும் உதறிப் போடுவார்.
துள்ளும் துகள்சில
விழுவதும் எழுவதும் என்றும்
வாடிக்கை என்பதால் வருந்துவ திலரே! - புதுவை அரங்க. நடராசனார்.
புதுப்பா போல் உள்ளதா?
அமைதி சான்ற அறிஞரும் அருமையான பாவலருமாகிய பேராசிரியர்
ம.இலெ.தங்கப்பா அவர்கள் இவ்வாறு கூறுகிறார்:
“தமிழ் யாப்பு வடிவங்களுக்குள் நின்று விடுதலையாகக் கருத்துரைக்க முடியவில்லை என்று கூறுபவர்கட்கு, அப்படி விடுதலையோடு கருத்து உணர்த்த இணைக்குறள் ஆசிரியப்பா இடம் கொடுக்க வல்லது.”
இன்னொரு இணைக்குறள் ஆசிரியப்பா:
இவர்தான் இவ்வலை உரிமையர் சிறப்புறப்
பாடல் பயிற்றுநர்
ஈடாரு மில்லா இனியர்
பண்புறை பாவலர்
தண்ணிய உரையினர்
சிங்கப் பூரில் தங்கி உழைக்குநர்
எங்குசென் றாலும் இன்றமிழ் ஏத்துநர்
ஆமாம்! இவரே அகரம் அமுதா!
தாமறி தமிழைத் தருநர் பிறர்க்கே! – த.ந.
இப்போது எளிதாக இணைக்குறள் ஆசிரியப்பா எழுதலாமே!
செவ்வாய், 8 செப்டம்பர், 2009
நிலைமண்டில ஆசிரியப்பா
நிலைமண்டில ஆசிரியப்பாவில், ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்கள் அமைந்திருப்பதோடு, எல்லா அடியும் அளவொத்து அமைந்திருக்கும்.
இன்னும் விளங்கக் கூறின், நிலைமண்டில ஆசிரியப்பாவில், ஈற்றயலடி உட்பட அனைத்து அடிகளும் நாற்சீர் அடிகளாக அமைந்திருக்கும்.
வள்ளுவன் மொழிந்த வாய்மொழிப் படியாம்
உள்ளுவ உள்ளி உவர்ப்ப உவர்த்துக்
கற்றறிந் தாங்கு முற்றுற நின்றே
யாமுறும் இன்பம் யாவரும் உறவே
நன்கினி துரைத்துப் பொன்கனி போல
இருநிலம் போல இனிதுவாழ் குவமே!
- புலவர் குழந்தை
இனி, அகரம் அமுதா ஐயா குறிப்பிட்டதைப் போன்று தமிழ்த்தாய் குறித்து நிலைமண்டில ஆசிரியப்பா எழுதுவோம்.
தமிழ்த்தாய்க்கோர் அகவற்பா செய்க!
சொன்னயம் படைத்தார்ச் சொல்லினிற் பிறந்து
மன்னர்தங் கொடையால் மாண்புற எழுந்தே
இன்றளவும் குறைவிலா இளமைசார்
அன்னையாஞ் செந்தமிழ் அணங்கைவாழ்த் துவமே!
குறிப்பு:-
தமிழ நம்பி அய்யா அவர்கள் அடுத்த பாடம் வழங்கும்வரை, இவ்விடுகையில் தமிழ்த்தாயைப் பற்றி அகவற்பா செய்க என அனைவரையும் அழைக்கிறேன்.
மன்னர்தங் கொடையால் மாண்புற எழுந்தே
இன்றளவும் குறைவிலா இளமைசார்
அன்னையாஞ் செந்தமிழ் அணங்கைவாழ்த் துவமே!
குறிப்பு:-
தமிழ நம்பி அய்யா அவர்கள் அடுத்த பாடம் வழங்கும்வரை, இவ்விடுகையில் தமிழ்த்தாயைப் பற்றி அகவற்பா செய்க என அனைவரையும் அழைக்கிறேன்.
அகரம் அமுதா
சனி, 5 செப்டம்பர், 2009
கண்ணோரம் கண்ணீர்க் கடல்!
(தமிழநம்பி அய்யா அவர்கள் அடுத்த பாடம் வழங்க காலமாதலால் இடையே ஓர் ஈற்றடி வழங்கப் படுகிறது.)
இக்கிழமைக்கான ஈற்றடி:- கண்ணோரம் கண்ணீர்க் கடல்!
இக்கிழமைக்கான ஈற்றடி:- கண்ணோரம் கண்ணீர்க் கடல்!
அகரம் அமுதா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)