அன்பார்ந்த வலையுலக நட்புள்ளங்களுக்கு,
அகரம் அமுதா அவர்களின் அறிவிப்பின்படி கீழ்க்காணும் நான்கு தலைப்புகளில் அறுசீர் மண்டிலப் பாக்கள் எழுதுமாறு கேட்டுக்கொள் கின்றேன்.
1. தமிழ்
2. தமிழர் நிலை
3. இயற்கையின் இனிமை
4. இறைவழிபாடு
ஒவ்வொரு தலைப்பிலும் இரண்டு அல்லது மூன்று மண்டிலப் பாக்கள் இருக்க வேண்டும்.
குறைந்தது ஒரு தலைப்பிலேனும் எழுதுங்கள். ஒன்றிற்கு மேற்பட்ட தலைப்புகளில் எழுதுவது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
ஒரு தலைப்பில் எழுதப்படும் மண்டிலங்கள் இரண்டானாலும் மூன்றானாலும் அவை ஒரே வகையினவாக இருக்க வேண்டும்.
ஒருதலைப்பில் எழுதப் பயன்படுத்திய அறுசீர் மண்டில வகையை இன்னொரு தலைப்பில் எழுதப் பயன்படுத்த வேண்டா.
மற்ற விளக்கங்கள் அ.அ. அவர்களின் அறிவிப்பில் உள்ளவாறே.
29-3-2010க்குள் எழுதிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
எழுதத் தொடங்குக.