திங்கள், 13 அக்டோபர், 2008

பாடம் 26 இல்பொருள் உவமையணி!

இயற்கையில் இல்லாத ஒன்றை (ஒருபொருளை) இருப்பது போலக் கற்பனை செய்துகொண்டு அக்கற்பனைப் பொருளை உவமையாக்குவதே இல்பொருள் உவமையணியாம்.

அன்பகத் தில்லார் உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று!


பாலையில் நீரின்றிக் காய்ந்து வரண்டுபோன வற்றல் மரம் மீண்டும் தளிர்த்தல் இயற்கையில் நிகழாத ஒன்று. உள்ளத்தில் அன்பற்ற உயிர்வாழ்வுக்கு இதனை உவமையாக்கியமையால் இஃது இல்லைபொருள் உவமையணியாகும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்!


மழலை தன் சிறுகையால் அளாவிய கூழை அமிழ்தினும் இன்சுவை உடையது என்கிறார் வள்ளுவர். அமிழ்து என்பது கற்பனையான பொருள். அமிழ்தினைக் கண்டவர்யார்? உண்டவர்யார்? கூழுக்கு உலகில் இல்லாத அமிழ்தை உவமையாக்கியதால் இல்பொருள் உவமையணியாகும்.

ஆக இல்லாத ஒன்றை இருக்கின்ற ஒன்றிற்கு உவமையாக்குதல் இல்பொருள் உவமையணியாம்.

இக்கிழமைக்கான ஈற்றடி:-

அகரம்.அமுதா

3 கருத்துகள்:

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com