வெள்ளி, 7 மே, 2010

சங்கத் தமிழனைத்தும் தா!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் உலகளாவிய கவிதைப் போட்டியில் பங்கேற்போர் மின்னஞ்சலிலும் தங்களது கவிதைகளை அனுப்பி வைக்க

ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவையில் ஜூன் 23-ம் தேதி தொடங்கவுள்ள, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி "சங்கத் தமிழ் அனைத்தும் தா' என்ற தலைப்பில் உலகளாவிய கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது.

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையிலான பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக் குழு சார்பில், இப்போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.3.2 லட்சம் பரிசு அளிக்கப்படுகிறது.


கவிதைகளை அனுப்ப வயது வரம்பு கிடையாது. ஒரு பக்க அளவில் 24 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருக்க வேண்டும். கவிதை, மரபுக் கவிதையாகவோ, புதுக் கவிதையாகவோ இருக்கலாம்.


கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்புவோருக்கு என தனியாக மின்னஞ்சல் முகவரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தபால் மற்றும் மின்னஞ்சலில் அனுப்புவோர் மே 20-ம் தேதிக்குள் கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மின்னஞ்சல் முகவரி: ul​ag​al​aviy​ak​avith​aipotti​@gm​ail.com,​​ pothu​ar​ang​am@ gm​ail.com​


இவ்வாய்ப்பை அனைவரையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகின்றேன். நன்றிகள்

3 கருத்துகள்:

  1. நல்ல தகவல் நண்பரே!!!வெற்றிபெற வாழ்த்துகிறேன்!!

    பதிலளிநீக்கு
  2. Nice Writeup.... :) i like this..Some techniques could come in handy.
    Keep posting.
    Greetings
    this is my novel..read if you have time and be my follower.i need around 200 blog follower to publish my novel...hope your support friend...thanks...
    wahh menarikk hahahaafarihah-->they r the best rite ^^
    wani-chan-->hahah best kn best kn tq!Scarves Scarves

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com