திங்கள், 15 மார்ச், 2010

பயிலுநர்க் கோர் அன்பான அறிவிப்பு!

வெண்பா எழுதலாம் வாங்க’ – வலையின் அன்பான பயிலுநர்க்கு அமுதனின் வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாவலர் தமிழநம்பி அய்யா அவர்கள் வழங்கிவரும் அறுசீர் ஆசிரிய மண்டிலங்களைக் கற்று, நல்ல பயிற்சி பெற்றுள்ளோம். பயிற்சி பெற்றால் மட்டும் போதுமா? தேர்ச்சி அடைந்த நிறைவு வேண்டுமல்லவா!

ஆதலால், பயின்ற 7-வகையான அறுசீர் மண்டிலங்களில் ஏதேனும் ஒரு வகையைக் கொண்டு, கொடுக்கப்படும் தலைப்புக்குப் பாக்கள் புனையுமாறு கேட்கலாம் என்ற எண்ணம் என்னுள் தோன்றிற்று. பாவலர் அவர்களும் அவ் வெனது எண்ணத்திற்கு இசைவு தெரிவித்தார்.

மொத்தம் மூன்று தலைப்புகள் வழங்கப்படும். தலைப்புகளைப் பாவலர் அவர்களே முடிவு செய்வார். நாம் வெகு சிலரே இத் தளத்தில் உள்ளமையால், ஒருவர் ஒரு தலைப்புக்குத்தான் எழுத வேண்டும் என்கிற கட்டுப்பாடெல்லாம் கிடையாது. ஒருவரே மூன்றுதலைப்புகளிலும் கூட பாவியற்றலாம்.

பாத் தேர்விற் பங்கு பெறுவதற்கான நெறிமுறைகள் :-

1.பாடங்களாக வழங்கப்பட்டுள்ள 7-வகை அறுசீர் மண்டிலத்தில் ஏதேனும் ஒருவகையைக் கொண்டு பாப்புனைய வேண்டும்.

2. நீங்கள் தேர்ந்தெடுக்கும் அறுசீர் மண்டிலத்தில் எழுதப்படும் பா இரண்டு மண்டிலங்களுக்குக் குறையாமலும், 3 மண்டிலங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். (4 அடிகளைக் கொண்டது ஒரு மண்டிலம் என்று பயிலுநர் அனைவருக்கும் தெரியும்)

3. எதுகை மோனை பற்றி முழுமையாக பயிற்சி பெற்றுள்ளதால், எதுகை, மோனை பிறழாமல் எழுதுதல் வேண்டும்.

4. தேவையான இடங்களில் தளை சரியாக இருக்க வேண்டும்.

5. அதிகமாகச் சொற்களைப் பிரித்து எழுதாமல் (வகையுளி) இயன்றவரை ஒவ்வொரு சீரையும் தனித்தனிச் சொற்களைக் கொண்டு அமைத்தல் சிறப்பு.

6.தலைப்புகள் வழங்கப்படும் நாளிலிருந்து 10 நாட்களுக்குள்
பாக்களை வழங்கிட வேண்டும்.

7.ஒன்றிற்கு மேற்பட்ட தலைப்புகளில் பாக்கள் புனைபவர்கள், ஒரே வகையான மண்டிலத்தைக் கொண்டு பாக்கள் புனையக்கூடாது. ஒரு தலைப்புக்குக் கையாண்ட மண்டிலத்தை, அடுத்த தலைப்புக்கு எழுதும் போதும் கையாளாமல் (கொடுக்கப்பட்டுள்ள 7 வகைகளுள்) வேறு மண்டிலத்தைப் பயன்படுத்த வேண்டும்.

8. இதில் தேர்ந்தவர் தேராதவர் என்ற நிலைகளில்லை. எல்லாரும் தேர்ந்தே இதுவரை மண்டிலங்களை அருமையாக எழுதியிருக்கிறார்கள். ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொன்னால் எப்படி எழுதுகிறோம் என்று தம்மைத்தாமே மதிப்பிட்டுக் கொள்ளவே இந்த ஏற்பாடு.

இந்த அறிவிப்பு குறித்துப் பயிலுநர் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

அகரம் அமுதா

9 கருத்துகள்:

  1. Hello Friend,  Hope everything is fine.
    I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

     
    Meharunnisha
    Doctoral Candidate
    Dept of Psychology
    Bharathiar University
    Coimbatore - 641046
    Tamil Nadu, India
    meharun@gmail.com
     
     
    (Pls ignore if you get this mail already)

    பதிலளிநீக்கு
  2. திரு அமுதா அவர்களுக்கு
    மிகச் சிறப்பான,ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அறிவிப்பு இது. மிக மகிழ்கிறேன்.ஆயினும் சிறு விண்ணப்பம். இப்பொழுது என் மகனின் தேர்வுகள் ஆரம்பமாகிவிட்டன. என்னால் சில நாட்கள் வலைப்பக்கம் வரயியலாது எனக் கூறவேவந்தேன். இவ்வறிவிப்பைப் பார்த்தவுடன் என்னால் அப்படிச் சொல்ல இயலவில்லை. அருள் கூர்ந்து 10 நாள் கெடுவை மட்டும் மாற்றுங்களேன். 20 ம் தேதி அவனது கணிதத் தேர்வு முடிந்ததும் என்னால் எழுதமுடியும். இடையூருக்கு மன்னிக்கவும்.நன்றி.
    அன்புடன் உமா.

    பதிலளிநீக்கு
  3. நல்ல அறிவிப்பே.! வரவேற்கிறோம்.!
    இதன் மூலம் பயிலுநர்களின் தமிழ்த்திறனை
    மேம்படுத்திக் கொள்ள முடியும்.
    நமது தமிழ்க்குழுமத்திற்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  4. தோழி உமா அவர்களின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. தமிழநம்பி அய்யா அவர்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகே தலைப்பை வழங்குவார் ஆக உமா அவர்கள் 20ம் நாளுக்குப் பின் எழுதத் துவங்குவதற்கு சரியாக இருக்கும்.

    ==== ==== ====

    அண்ணாமலையாரின் கருத்துக்களுக்கு நன்றிகள். அவர்தம் தமிழ்த்திறத்தை அழகுற வெளிப்படுத்துவார் எனக்கருதுகிறேன். நன்றிகள்.

    ==== ==== ====

    அனியம் என்கிற ஒரே சொல்லால் அனைத்தையும் உரைத்துவிட்டார் வசந்த் அவர்கள் அவருக்கும் நம் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. பணிகளினிடையே பாப்புனைய நேரம் இல்லைதான். இருந்தாலும், அமுதா இப்படிச் சொல்வாரோ? :

    இடையூ றிருப்பினும் இஃதுமக் கின்பம்
    தடையா தியற்றித் தொழுவீ - ரடையாளம்
    காணாமற் போய்வரும் கண்ணமுதைக் கற்றறிந்த
    மாணாக்க ருக்கிஃதே மாண்பு.

    பதிலளிநீக்கு
  6. அழகான வேண்பாவில் அருமையான கருத்தைப் பதித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அய்யா! வெண்பாக்களையும் நாம் இவ்வேளையில் மறந்துவிடவில்லை என்பதற்கு இப்பா ஓர் அழகிய சான்று!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம். எனது பணி முடிந்தது. தலைப்பிற்க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். பொறுமைகாத்ததற்க்கு அனைவருக்கும் மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com